புங்கை மரத்தின் நன்மைகள்
இன்றைய வெப்பநிலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் மரங்கள் இல்லாதது. வளர்ச்சிப்பணிகள் என்று, ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. இதனால், நிழல் தந்த பல மரங்கள், இயற்கை எய்தி விட்டன. மழை குறைவுக்கும் ஒரு காரணம் இது தான். மரங்களை வெட்டி விட்டு, மழை இல்லையே என்று குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை. சமூக ஆர்வலர்களின் தொடர் விழிப்புணர்வு, பலரது மனங்கள் மத்தியில், மரங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டிருக்கிறது. நல் உள்ளம் கொண்ட இயற்கை ஆர்வலர்களால், ஆங்காங்கே, வீடுகளிலும், தெருவோரங்களிலும் மரக்கன்றுகளை கொஞ்சமாவது பார்க்க முடிகிறது. கான்கிரீட் வீடுகளாலும், அவற்றில் இருந்து வெளியேறும் வேதியல் கூறுகளாலும், மரங்களை அழித்ததாலும், காற்று வெப்பமடைந்து வருகிறது. பற்றாக்குறைக்கு, வாகனங்களின் புகையால் காற்றின் வெப்பம் அதிகரிக்கிறது. அதிகப்படியான மின் விளக்குகளாலும் வெப்பம் அதிகரிக்கிறது. காற்றில் உள்ள வெப்பத்தையும், மாசுவையும் குறைக்கும் குணமுள்ளது புங்கை. அதேபோல், இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றை சுலபமாக, மாசுவில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணிக்கும் திறன் க